NIA ரெய்டு: ஆபாச பேச்சு- இழிவான விமர்சனங்களால் குண்டாஸ்-சீமான் ’வலது கரம்’ சாட்டை துரைமுருகன் யார்?
சென்னை: வெளிநாட்டு நிதி உதவி, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு விவகாரங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA- என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ. சோதனையில் சிக்கியவர்களில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலைபோல நம்பும் வலதுகரம் சாட்டை துரைமுருகனும் ஒருவர்.
சாட்டை துரைமுருகன்.. நாம் தமிழர் கட்சியின் தற்போதைய கொள்கை பரப்பு செயலாளர். சீமானால் 2 முறை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர்.

சாட்டை துரைமுருகன் தாம் மெடிக்கல் ரெப்- ஆக பணிபுரிந்ததாக மேடைகளில் குறிப்பிடுவார். ஒவ்வொரு பொதுக் கூட்ட மேடையிலும் திமுக தலைவர்களை குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போல பேசி இழிவான சொற்களில் விமர்சிப்பவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் தொடர்ந்தும் இழிவாக பேசியவர் சாட்டை துரைமுருகன். இதனால் சட்டை துரைமுருகன் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்தன. ஒருகட்டத்தில் குண்டர் சட்டமும் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்தது.
இந்த வழக்குகளில், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய சாட்டை துரைமுருகன் தமது ஆண் உறுப்பில் தொற்று ஏற்பட்டுவிட்டது என்பது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டிருந்தார். ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்த போதும் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.
சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பண பேரம் பேசிய சாட்டை துரைமுருகனின் ஆடியோவும் வெளியானது. அதேபோல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும் சீமானை எதிர்ப்பவர்களையும் மிக மோசமான தரகுறைவான வார்த்தைகளால் சாட்டை துரைமுருகன் விமர்சிக்கும் ஆடியோக்களும் வெளியாகி சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
இத்தனைக்குப் பிறகும் சாட்டை துரைமுருகனை தமது வலதுகரமாகவே சீமான் வைத்திருப்பதற்கு காரணமே தற்போது என்.ஐ.ஏ. கையில் எடுத்திருக்கும் வெளிநாட்டு நிதி உதவிதான் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது என்.ஐ.ஏ. குறி வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்களில் சாட்டை துரைமுருகன்தான் முக்கியமானவர். இதனால்தான் சீமானுக்கும் நெருக்கடி எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications