சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் பயங்கர அடிதடி.. போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதிக்கொண்டனர், இதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த மோதல் தொடர்பா சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதியான புழலில் மிகப்பெரிய சிறை இருக்கிறது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்றுவிதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி புழல் சிறையில் உள்ளது. 30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின்மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள் இருக்கிறது. இவை அனைத்தும் தனித்தனியாகவும் நிர்வாகம் செய்யப்படுகிறது.
புழல் சிறையில் ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள்வரை பாரா பார்க்கிறாரக்ள். 24 மணிநேரமும் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மேல் புழல் ஜெயிலர் இருப்பார்.
சென்னை புழல் சிறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் கைதிகளுக்குள் அவ்வப்போது மோதல் நடக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு கைதிகள் மோதல் அடிக்கடி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு கைதிகள் புழல் சிறையில் தான் அடைக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண் வெளிநாட்டு கைதிகள் புழல் சிறையில் மட்டுமே அடைக்கப்படுகிறார்கள். வெளிநாட்டு பெண் கைதிகள் அடிக்கடி மோதிக்கொள்வது நடக்கிறது. அண்மையில் கூட பெண் காவலரை வெளிநாட்டு பெண் கைதி தாக்கிய சம்பவம் நடந்தது,

இந்நிலையில் தற்போது சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்து. நைஜீரியாவைச் சேர்ந்த எனினி மோனிகா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காகோசி ஸ்டெல்லா ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலில் லிஸி என்ற கைதிக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புழல் சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம் குறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications