நடிகர் அஜித்துக்கு சொந்தமான சென்னை வீட்டில் ரெய்டு.. தீயாய் பரவிய தகவல்.. வனத்துறை மறுப்பு
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்துக்கு சொந்தமான திருவான்மியூர் வீட்டில் வனத்துறையினர் இன்று ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், அதை வனத்துறை மறுத்துள்ளது.
நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீடு பராமரிப்பு பணிகளில் உள்ளது. எனவே அந்த வீட்டில் தற்போது உதவியாளரான சுரேஷ் சந்திரா உள்ளார்.

சுரேஷ் சந்திரா என்பவர் வெறும் உதவியாளர் மட்டுமல்ல, செய்தித்தொடர்பாளர், மேலாளர் என பல பணிகளை கவனித்து வருகிறார். அஜித் எங்கே செல்வார் என்பது உள்ளிட்ட அனைத்து பயண திட்டங்களையும் சுரேஷ் சந்திராதான் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிக்கைக்கு சுரேஷ் சந்திரா அளித்த பேட்டியில், தான் மலைப்பாம்பை பராமரிப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று மதியம் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் ரெய்டு நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று, சென்னை வனத்துறை சரகர் மோகன் தெரிவித்துள்ளார். சுரேஷ் சந்திரா தரப்பு தனது விளக்கத்தில், "தனது வீட்டில் பாம்பு இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications