ஏற்காடு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. இரவிலும் தீயை அணைக்கும் பணி தீவிரம்!
சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேம மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சம் வனப்பகுதி ஏற்காடு. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில், ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு, அது வேகமாகப் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது தினமும் பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வனப் பகுதிகளைப் பொறுத்தவரை கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவிட வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கடும் கோடை வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சருகுகள் அகற்றப்பட்டு, 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டது.
எனினும், சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் இன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications