முதல் நாளில் சஸ்பெண்ட்.. அடுத்த நாளே ரத்து! ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரம்.. முதல்வருக்கு நேரில் நன்றி
சென்னை: காவல்துறையில் ஏடிஎஸ்பியாக பணியாற்றிய வெள்ளத்துரை ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெள்ளத்துரை நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்தி குப்பத்தில் ரௌடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் பிரபலமானார்.

இதேபோன்று கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரௌடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் காவல்துறையில் பேச்சு உள்ளது. இதனால் இவரை 'என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்” என காவல்துறையினர் அழைப்பர்.
வெள்ளத்துரை: இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக இருந்து வந்தார். இந்த நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி விசாரணை: கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரௌடி ராமு என்கிற கொக்கி குமார் காவல்நிலைய மரணம் சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளத்துரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.
சஸ்பெண்ட் ரத்து: இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை ஒருநாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின்: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதை ரத்து செய்து உத்தரவு வெளியானது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்ட பிறகே உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரத்தில் பெண் உயர் அதிகாரி ஒருவரை முதலமைச்சர் கண்டித்ததாகவும், அதன் பிறகே வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
முதல்வருடன் சந்திப்பு: இதனையடுத்து முறைப்படி தனது பணியில் இருந்து வெள்ளத்துரை ஓய்வு பெற்றார். தொடர்ந்து தற்போது பணி அனுபவங்கள், என்கவுண்டர்கள், ரவுடிகள் குறித்து யூட்யூப் சேனல்களில் அவர் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் தனது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நன்றி தெரிவித்துள்ளார். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்த அவர் நினைவுப் பரிசை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications