ஐஐடி மெட்ராஸுக்கு ரூ 110 கோடி நன்கொடை! யார் இந்த சுனில் வாத்வானி?
சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்க முன்னாள் மாணவர் ஒருவர் மட்டும் ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான (Data Science) ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ 110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி பள்ளி இந்தியாவில் AI துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் 1975 ஆம் ஆண்டு சுனில் வாத்வானி படித்து முடித்தார்.
இவர் பட்டப்படிப்பு முடித்தவுடனேயே சுகாதாரத் துறையில் முதலீடு செய்து புதிய தொழிலை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்களை பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்த்துவிட்டார். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் ஆராய்ச்சி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல் முறை. இதுகுறித்து பேசிய சென்ன ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் புதிதாக தொடங்கப்படும் ஆராய்ச்சி பள்ளியில் AIDA (Artificial Intelligence and Data Science) என்ற பெயரில் பட்டம் பெறலாம்.
இதை தொடங்க காரணமாக இருந்த வாத்வானியின் பெயரை கொண்ட இந்த படிப்பு தொடங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளுடன் இங்கிலாந்தின் பர்ஹிம்ஹாம் பல்கலைக்கழகத்துடன் MSc படிப்பு 15 பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவுக்கு என தனிபாடத்திட்டம் இருந்தாலும் அது பாடபிரிவாக செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆண்டிற்கு ஒரு இளநிலை படிப்பில் 30 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, நிதி, பகுப்பாய்வு, உற்பத்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு கல்வி, உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் ஐஐடி கேட் தேர்வுகள் மூலம் டேட்டா சயின்ஸ் அல்லது செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சர்வதேச நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா (பேஸ்புக்) உள்ளிட்ட நிறுவனங்களில் ஏஐ பட்டப்படிப்பு பெரும் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications