ஐஐடி மெட்ராஸுக்கு ரூ 110 கோடி நன்கொடை! யார் இந்த சுனில் வாத்வானி?
சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்க முன்னாள் மாணவர் ஒருவர் மட்டும் ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான (Data Science) ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ 110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி பள்ளி இந்தியாவில் AI துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் 1975 ஆம் ஆண்டு சுனில் வாத்வானி படித்து முடித்தார்.
இவர் பட்டப்படிப்பு முடித்தவுடனேயே சுகாதாரத் துறையில் முதலீடு செய்து புதிய தொழிலை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்களை பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்த்துவிட்டார். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் ஆராய்ச்சி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல் முறை. இதுகுறித்து பேசிய சென்ன ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் புதிதாக தொடங்கப்படும் ஆராய்ச்சி பள்ளியில் AIDA (Artificial Intelligence and Data Science) என்ற பெயரில் பட்டம் பெறலாம்.
இதை தொடங்க காரணமாக இருந்த வாத்வானியின் பெயரை கொண்ட இந்த படிப்பு தொடங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளுடன் இங்கிலாந்தின் பர்ஹிம்ஹாம் பல்கலைக்கழகத்துடன் MSc படிப்பு 15 பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவுக்கு என தனிபாடத்திட்டம் இருந்தாலும் அது பாடபிரிவாக செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆண்டிற்கு ஒரு இளநிலை படிப்பில் 30 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, நிதி, பகுப்பாய்வு, உற்பத்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு கல்வி, உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் ஐஐடி கேட் தேர்வுகள் மூலம் டேட்டா சயின்ஸ் அல்லது செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சர்வதேச நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா (பேஸ்புக்) உள்ளிட்ட நிறுவனங்களில் ஏஐ பட்டப்படிப்பு பெரும் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications