மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை.. உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.. சந்துரு கருத்து!
சட்டம் செல்லுமா, செல்லாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று சந்துரு கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் உள்நோக்கம் கொண்டதாக தெரிவதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ, அதே வடிவத்தில் தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது என்று கூறியுள்ள சந்துரு, ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்
இந்த நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்ததால், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதனிடையே தமிழ்நாடு அரசு அனுப்பிய தடைச் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், உடனடியாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதம் 11 நாட்களுக்கு பின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து
இதுகுறித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தயாரிப்பு குழு தலைவர் சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை. நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாக உள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் இரட்டை நாடகம் போடுகிறார். மசோதாவை திருப்பி அனுப்பியதில் ஆளுநரின் சூதாட்டமே அதிகமாக உள்ளது.

அதிகாரம் யாருக்கு?
பாஜகவிற்கு தேர்தல் நிதி வசூலிக்கும் நாடகமா என தெரியவில்லை. ஆளுநர் இந்த கருத்தை சொல்ல 4 மாத அவகாசம் தேவையில்லை. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கிளை செயலாளர்கள் போல் செயல்படுறார்கள். மேலும் சட்டம் செல்லுமா, செல்லாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

உள்நோக்கம்
தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில்தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications