நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் சிறை!
சென்னை: நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். அவர் பணிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

ஓய்வுக்குப் பின்னரும் கர்ணன் தொடர்பான சர்ச்சை ஓயவில்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை மிக மோசமாக, ஆபாசமாக விமர்சித்து நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டு சர்ச்சையானது.
இதனால் கர்ணன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, கர்ணனிடம் விசாரணை நடத்தினோம்; இனி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடமாட்டேன் என கர்ணன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலில் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதாரங்கள் இருந்தும் கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் சென்னை ஆவடியில் இன்று முன்னாள் நீதிபதி கர்ணனனை சென்னை மத்திய குற்றப்ப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு சுமத்திய வழக்கில் கர்ணன் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications