5 பேரைக் காப்பாற்றவே பாஜகவோடு கூட்டணி.. எடப்பாடிக்கு நேரம் பார்த்து அன்வர் ராஜா கொடுத்த குடைச்சல்!
சென்னை: யாரோ 5 அல்லது 10 பேரைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளார் என்று முன்னாள் எம்பி அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு அடிமை சாசனத்தை அதிமுக எழுதிக் கொடுத்துவிட்டது என்று கூறிய அன்வர் ராஜா, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பாஜக உடனான கூட்டணி உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்து கொண்டார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு இல்லை என்று பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ராமநாதபுரம் போன்ற இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதிகளில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் அரணாக பாஜகவை உடன் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அது எடுபடுமா என்ற விவாதமும் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். ஓபிஎஸ் தரப்பையும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுக்கும் நிலையில், அதிமுகவுக்கு மிகப்பெரிய சோதனை இருந்து வருவதாகப் பார்க்கப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.
இந்த நிலையில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை எடப்பாடி பழனிசாமி மீது முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அன்வர் ராஜா பேசுகையில், அதிமுக - பாஜக கூட்டணியில், அதிமுக தீர்மானிக்கும் இடத்தில் கூட இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தான் இந்த கூட்டணியையே வைத்திருக்கிறார்கள்.
யாரையோ 5 பேர், 10 பேரைக் காப்பாற்றுவதற்காகவே இந்த கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. கட்சியைக் காப்பாற்றுவதற்காக இப்படியொரு கூட்டணியை வைப்பார்களா? 2024ல் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தாரா? இல்லையா? அன்றைய நாளில் அதிமுக தொண்டர்கள் தீபாவளி போல் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
ஆனால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்று அதிமுக அறிவித்த போது, அது கேத வீட்டைப் போல் இருந்தது. எங்கேயாவது மகிழ்ச்சி இருந்ததா? தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலே இருப்பவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், அதனை தொண்டர்கள் ஏற்கவில்லை. அதனால் அதிமுக - பாஜக கூட்டணி களத்தில் இணைந்து செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications