உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் சென்னையில் காலமானார்
சென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன். இவருக்கு 90 வயது ஆகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நீதிபதி மோகன், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான சிகிச்சை பலன் இன்றி நீதிபதி எஸ் மோகன் உயிரிழந்தார்.
1930ம் ஆண்டு பிறந்த நீதிபதி எஸ். மோகன் என்ற சண்முக சுந்தரம் மோகன், சென்னை பிரசிடன்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து மெட்ராஸ் யுனிவர்சிட்டியல் சட்டம் முடித்தார் 1970களில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட மோக்ன். . சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றார். அதன்பிற்கு 1995ம் ஆண்டு ஒய்வு பெற்றார்












Click it and Unblock the Notifications