நோயாளிகளின் காதை கிழித்த ஒலிபெருக்கிகள்! ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் சர்ச்சை! உதயநிதி அதிரடி
சென்னை: சென்னையில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த பந்தயத்தையொட்டி ஓமந்தூரார் மருத்துவமனை நோயாளிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்த ஒலிப்பெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவில் அகற்றப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் சத்தம் கேட்காத வகையில் சவுண்ட் புரூப்பிங் அமைக்கப்பட்டு வருகிறது.
தெற்காசியா மற்றும் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை 2 நாட்கள் நைடெபற உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த உள்ளது.

சென்னையில் இந்த போட்டியை நடத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் கார் பந்தயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி நாளை சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெற முக்கிய காரணம் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இந்நிலையில் தான் அவரை திரைத்துறையை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.
இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் என்பது சென்னை தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை நடக்கும். கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள இடங்களை இணைத்து 3.5 கிலோமீட்டர் சர்க்யூட்டில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் பந்தயத்துக்காக ஒலிபெருக்கிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கார் பந்தயம் நடக்கும் வழித்தடங்களில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே செல்லும் கார் பந்தயத்துக்கான வழித்தடத்திலும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தன.
இதில் இருந்து வந்த சத்தத்தால் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கார் வழித்தடம் மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் இடத்தை காட்டும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவ தொடங்கியது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவால் அந்த மருத்துவமனை அருகே செல்லும் வழித்தடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி உயர்நீதிமன்றஉத்தரவின்படி மருத்துவமனைக்கள் வெளிப்புற சத்தம் எதுவும் வராத வகையில் Sound Proofing அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications