Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மது பாட்டிலுடன் கொண்டாட்டம்.. மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில், நொறுக்குத் தீனிகளுடன் புத்தாண்டு கொண்டாடியதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 2 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு ஒரு கட்டிடத்திலும், புற நோயாளிகள் உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளுக்கான பிரிவு மற்றொரு கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.

Four Doctors One Pharmacist Suspended Over New Year Liquor Party at Sivaganga PHC

இந்நிலையில், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் விபத்தில் காயம் அடைந்தார். அவரை ஒரு வாலிபர் சிகிச்சைக்காக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அறை உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு அறை கதவை தட்ட முயன்றபோது அது திறந்தது. உள்ளே யாரும் இல்லை.

மருத்துவர் இல்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப்பகுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்று பார்த்த போது மருத்துவர் அறையில் இருந்த கட்டில் மீது உயர் ரக மதுபான பாட்டில், சிக்கன் துண்டுகள், நொறுக்குத் தீனிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பணியில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

இதுகுறித்து தீவிர விசாரணை நடந்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.31 ஆம் தேதி மதுபாட்டில், நொறுக்குத்தீனிகள் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+