சுபஶ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வழக்கு- 4 கூலித் தொழிலாளர்கள் ஜாமீனில் விடுதலை
Recommended Video
சென்னை: அதிமுக பிரமுகர் ஜெயபஅல் வைத்த பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் சுபஶ்ரீ பலியான வழக்கில் பேனர் கட்டியதாக கைது செய்யப்பட்ட 4 கூலித் தொழிலாளர்களை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அதிமுக பிரமுகர் ஜெயபால் தமது விட்டு திருமணத்துக்காக சட்டவிரோதமாக பேனர்களை சாலைகளில் வைத்திருந்தார். இந்த பேனர்களில் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஶ்ரீ மீது விழுந்தது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஶ்ரீ மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஶ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை கையிலெடுத்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயபால் 14 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேனர்கள் மற்றும் கொடிகளை கட்டிய பழனி, சுப்பிரமணி, சங்கர் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 4 கூலித்தொழிலாளர்களையும் காவல்நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடப்ப்பட்டது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications