Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் கொலையாளிகள்: முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் முதலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி உள்ளிட்ட 6 தமிழரும் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டனர்.

Four Rajiv Gandhi Killers to get Passport: Minister S.Regupathy

சிறையில் இருந்து தற்போது 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஈழத் தமிழர்கள். ஆகையால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 ஈழத் தமிழரையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கை. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர். 4 பேரும் விரும்பும் நாடு ஒன்றுக்கு செல்லலாம். இவர்கள் 4 பேரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+