ராஜீவ் கொலையாளிகள்: முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
சென்னை: ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் முதலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி உள்ளிட்ட 6 தமிழரும் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து தற்போது 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஈழத் தமிழர்கள். ஆகையால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 ஈழத் தமிழரையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கை. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர். 4 பேரும் விரும்பும் நாடு ஒன்றுக்கு செல்லலாம். இவர்கள் 4 பேரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications