அண்ணா பல்கலை விவகாரம்! ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்கணும்!சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே இந்த 20 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியது.

அண்ணா பல்கலை. விவகாரம்:
சம்பந்தப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை நடத்தினர். அதில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் அத்துமீறி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கோரி மனு:
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் என்பவர் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளைத் தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு இந்த வழக்குகளை மாற்றக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications