உலக வரலாற்றில் ஆபத்தான காலம்.. 4 மாதங்களுக்கு பின் பூமி நிலப்பரப்பில் 7-8% காலி.. பாபா வங்கா கணிப்பு
சென்னை: பாபா வங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அவரது புதிய கணிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. இவை உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறார்களா?

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.
பாபா வங்கா சக்தி:
அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.
2026ம் ஆண்டிற்கான கணிப்பு
பாபா வங்கா, 2025ஆம் ஆண்டில் பெரும் அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் எதிர்நோக்கி இருந்தார். தற்போது வெளியாகியுள்ள அவரது 2026ஆம் ஆண்டு கணிப்புகள், முன்னெப்போதும் இல்லாத பதற்றத்தை உருவாக்குகின்றன. இந்த கணிப்புகள் பலருக்கும் கலக்கத்தை தந்துள்ளன. அவற்றை நாம் விரிவாக காணலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள்: இயற்கை சீற்றங்கள்
அடுத்த 4 மாதங்கள் முடிந்ததும்.. அதாவது 2026ஆம் ஆண்டில் பூகம்பங்கள், எரிமலைகள் வெடிப்பு, கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும். இவை மனிதர்களுக்கும் பூமிக்கும் பெரும் சேதத்தை உருவாக்கும். பூமியின் நிலப்பரப்பில் 7-8% வரை பாதிக்கப்படலாம். இதற்கான ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே தெரிய வந்துள்ளதாக பலர் நம்புகின்றனர்.
பாபா வங்கா கணிப்புகள்: உலகப் போர் மற்றும் பதற்றம்
2026ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகப் போர் வெடிக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2025ஆம் ஆண்டிலேயே பல பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், தாய்லாந்து-கம்போடியா இடையே நிலைமை மோசமானது. வங்காவின் கணிப்பின்படி, இது மேலும் அதிகரிக்கும். சீனா தைவானை தாக்கக்கூடும் என்றும், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது உலக வரலாற்றில் மிக ஆபத்தான காலகட்டமாக அமையலாம். எனவே, உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாபா வங்கா கணிப்புகள்: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சியையும் பாபா வங்கா கணித்துள்ளார். 2025ஆம் ஆண்டிலேயே AI வேகம் அதிகரித்தது. மனிதக் குரல் உருவாக்கம் முதல் முக்கிய முடிவுகள் வரை AI முன்னேறியது. சிலர் இதை நல்ல முன்னேற்றமாகக் கருதுகின்றனர். ஆனால், பலர் இதனால் கவலைப்படுகின்றனர். கட்டுப்படுத்தப்படாத AI இன் விரைவான வளர்ச்சி, பல மனித வேலைகளை பறிக்கலாம். இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. வங்காவின் கணிப்பு உண்மையானால், 2026 இல் AI ஒரு உச்சத்தை எட்டும்.
2026 பாபா வங்கா கணிப்புகள்: வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு
பாபா வங்காவின் பல கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகி உள்ளன. வேற்று கிரகவாசிகள் பற்றிய அவரது கணிப்பு பலருக்கும் கவலையை தருகிறது. இது விண்வெளியில் எங்கோ உயிரினங்கள் இருப்பதற்கான கண்டுபிடிப்பாக இருக்கலாம். வங்காவின் கணிப்புப்படி, நவம்பர் 2026இல் ஒரு பெரிய வேற்று கிரக விண்கலம் பூமியை நெருங்கும்.
இந்த கூற்று, மனிதர்கள் வேற்று கிரகவாசிகளை முதன்முறையாகத் தொடர்பு கொள்ளக்கூடும் என்று தெரிவிக்கிறது. ஹார்வர்டு வானியற்பியலாளர் அவி லோப்-ஐ நம்பினால், 3I/ATLAS என்ற விண்வெளிப் பொருள் பூமிக்கு அருகில் உள்ளது. பல நிபுணர்கள் இதை ஒரு இயற்கை பனிக்கட்டி வால்மீன் என்று கூறினாலும், லோப் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் இது வேற்று கிரகத் தொழில்நுட்பமாக இருக்கலாம், ஒருவேளை பகைமையான குணம் கொண்டதாகவும் இருக்கலாம் என தெரிவித்தனர்.
பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. இயற்கை சீற்றங்கள், உலகப் போர், AI வளர்ச்சி, வேற்று கிரக தொடர்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த கணிப்புகள் எதிர்கால உலக நிகழ்வுகள் குறித்து சிந்திக்க வைக்கின்றன. அவை உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications