தமிழகத்தில் வலுத்து வரும் போராட்டம்.. இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுத்து வருவதால் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் ஒட்டுமொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களிலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர், தஞ்சை உள்ளிட்ட கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தல், புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ஆம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
இந்த விடுமுறை அறிவிப்பை தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தற்போது அவர்களுக்கு இன்று முதல் விடுமுறையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications