பெட்ரோல், டீசல் விலை.. இறங்குச்சு.. இப்ப மறுபடியும் ஏறுது.. இது நல்லதுக்கு இல்லையே!
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டு வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்களும் அதிர்ந்து உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்புவரை இதுதான் உச்சம் என்று முடிவு தெரியாத வரை பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கான போராட்டங்களை மாநிலங்கள் முதல் பாரத் பந்த் வரை நடத்தியும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இதற்கு காரணத்தை கேட்டால், நாங்களா விலை ஏற்றுகிறோம், சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என நழுவி கொண்டது மத்திய அரசு.
ஆனால் 5 மாநில தேர்தல் சமயங்களில் இறங்குமுகமாக பெட்ரோல், டீசல் விலை இருந்ததற்கு காரணம் யார் என்று மட்டும் இதுவரை தெரியவில்லை. இதெல்லாம் நம்பலாமா? நம்பப்படாதா? என்ற ரீதியில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே போனது.
இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று மக்கள் தெளிவாக தான் இருந்தார்கள். அதன்படியே இப்போது விலை உயர்ந்து வருகிறது. அதாவது 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்து 57 நாட்கள் ஆகிவிட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக விலையில் ஏற்றம் வந்துள்ளது.
இன்று ஒரு லிட்டர் 73.85 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 69.41 ஆகவும் விற்பனையில் உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.79 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.3.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், அதன்பிறகு மெல்ல மெல்ல உயர்த்தியும் பொது மக்களுக்கு கொதிப்பு கலந்த கலக்கத்தை ஏற்படுத்தி வருவது நடுவண் அரசுக்கு நல்லதுக்கு இல்லை என்று மட்டும் ரொம்ப தெளிவாக தெரிகிறது.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’ -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications