மதிப்’பெண்கள்’னு பேர் வச்சா இப்படி தான்! பிளஸ் 1 பொதுத்தேர்விலும் மாணவிகள் தான் கெத்து!
சென்னை :தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.17 சதவீதமாக உள்ளது வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 பேர் எழுதிய நிலையில் தேர்ச்சி சதவீதம் 90.93 ஆக இருந்தது. 7534 மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் மாணவர்களை தேர்வு எழுத வைத்து நிலையில் 1964 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.
அரசு பள்ளிகளில் 85.75% மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.36% மாணவர்களும், தனியார் சுயநதி பள்ளிகளில் 98.09 மாணவர்களும், இருபாலர் பள்ளிகளில் 91.61% மாணவர்களும்,பெண்கள் பள்ளிகளில் 94.4 சதவீத மாணவிகளும், ஆண்கள் பள்ளிகளில் 81.37 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications