Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5ல் ஒருவர்.. வேகமாக பரவிய செய்திகளுக்கு ஸ்டாலின் வைத்த "புல் ஸ்டாப்".. அந்த நொடி.. உருகிய கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு வதந்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஒருவழியாக திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. அதேபோல் இன்று தலைவர், பொருளாளர். பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

கனிமொழி

கனிமொழி

இந்த அறிவிப்பிற்கு முன்பு வரை திமுகவிற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வதந்திகள், விவாதங்கள் இது தொடர்பாக வந்தன. கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது. சுப்புலட்சுமி ஜெகதீசன்தான் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். ஆனால் அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து வெளியேறிய காரணத்தால் இந்த பதவி கட்சியில் இருக்கும் வேறு ஒரு பெண் தலைவருக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

வதந்தி

வதந்தி

கனிமொழி பெயர் இதில் அடிபட்டாலும்.. ஒரு சிலர் ஸ்டாலின் அந்த பதவியை கனிமொழிக்கு கொடுக்க மாட்டார் என்றும் வாதம் வைத்தனர். தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தாய் சேர்ந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இந்த லிஸ்டில் முன்னிலையில் இருந்தார். திமுகவின் மகளிரணி செயலாளராக கனிமொழி இருப்பதாக, தமிழரசிக்கு இந்த பதவி கிடைக்கும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன. தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை எப்படியாவது அள்ள வேண்டும் என்று பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் முயன்று வருகின்றன.

 தமிழரசி

தமிழரசி

பிரதமர் மோடியே தன்னை நான் நரேந்திரர்.. நீங்கள் தேவேந்திரர் என்று அழைக்க இது முக்கியமான காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் தமிழரசியை துணை பொதுச்செயலாளர் ஆக்கினால் அது மிகப்பெரிய அளவில் கவனம் பெறும் என்று கூறப்பட்டது. கனிமொழிக்கு ப்ரமோஷன் கொடுக்காமல் தமிழரசியை ஸ்டாலின் முன்னிறுத்துவார் என்று பலர் பேசி வந்தனர். இந்த நிலையில்தான் இந்த வாதங்கள், விவாதங்கள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விவாதங்கள்

விவாதங்கள்

கட்சிக்குள் நிலவிய விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, கனிமொழிதான் துணை பொதுச்செயலாளர் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதெல்லாம் போக திமுகவில் 5 பேருக்கு இருக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியை 7 பேருக்கு அறிவிக்க ஸ்டாலின் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த பதவிக்கான மவுசை குறைத்து, அதில் ஒருவரோடு ஒருவராக கனிமொழியை ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூட வதந்திகள் பரவி வந்தன.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஸ்டாலின் கனிமொழியை துணை பொதுச்செயலாளராக அறிவித்து உள்ளார். அதோடு துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இன்று அந்த அறிவிப்பு வெளியானது கனிமொழி நெகிழ்ச்சியாக காணப்பட்டார். கர்ஜனை மொழி.. கனிமொழி என்று ஸ்டாலின் பாராட்டி அழைத்ததும் கனிமொழி உருக்கமாக வணங்கியபடி மேடைக்கு வந்து மரியாதை செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+