''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..!
சென்னை: தமிழக அரசியலில் தனி தடம் பதித்த ஜி.கே.மூப்பனாரின் 18-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை பற்றி சிறிய பின்னோட்டம்;
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் பிறந்த ஜி.கே.முப்பனார் வசதி வாய்புகளுக்கு குறைவில்லாதவர். அவரது குடும்பத்திற்கு பெயரே, பண்ணையார் குடும்பம். இன்றளவும் அந்தப் பெயரில் தான் கிராமமக்கள் வாசனையும் அழைக்கின்றனர்.
கருப்பையா என்பது தான் அவரது பெயர். பெயர் சொல்லி அழைப்பதை தவிர்ப்பதற்காக ஊர்மக்கள் மூப்பனார் என அழைக்கத் தொடங்கி அது ஜி.கே.மூப்பனார் என்றாகிவிட்டது

பணக்கார பிள்ளை
பொதுவாக பணக்கார வீட்டு பிள்ளைகள் பொதுவாழ்க்கைக்கு வருவது அறிதான நிகழ்வு. ஆனால் அந்தக்காலத்திலேயே செல்வத்திற்கு குறை இல்லாத சூழலிலும் அரசியலில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸில் இணைகிறார் மூப்பனார். பார்க்க துறுதுறுவென இருந்ததாலும், பணத்திற்கு பஞ்சமில்லை என்பதாலும் 1965-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவரை தேடி வந்தது.

கெட்டிக்காரர்
மூப்பனார் கிடுகிடுவென அரசியலில் வளர்ச்சியடைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்(நிர்வாகம்) பொறுப்பு வரை வகித்தார். மூப்பனாரிடம் ஒரு வேலையை டெல்லி தலைமை கொடுத்துவிட்டது என்றால், அதனை எப்பாடுபட்டாவது சாக்குபோக்குகள் சொல்லாமல் முடித்துக்காட்டுவார். இவரது கெட்டிக்காரத் தனத்தை ராஜீவ்காந்தியே பலமுறை மூப்பனாரிடமே சிலாகித்திருக்கிறார்.

உதவும் மனசு
அரசியலில் பொதுவாக யாரும் யாரையும் வளர்த்துவிடமாட்டார்கள். இது எழுதப்படாத விதியாக இன்றும் உள்ளது. ஆனால், மூப்பனாரை பொறுத்தவரை பலரை கைதூக்கிவிட்டு ஆளாக்கிவிட்டார். புதிதாக கட்சி தொடங்கி தடுமாறிய காலத்தில், திருமாவளவனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தார். தொண்டரிடம் தோளில் கைபோட்டு, எப்ப சென்னை வந்த?..சரி, கவலைப்படாம ஊருக்கு போ பார்த்துகலாம் எனக் கூறி அனுப்பி வைப்பதோடு, அந்ததொண்டரின் தேவைகளையும் நிறைவேற்றி தருவாராம்.

மனக்கசப்பு
1996-ல் அதிமுகவுடன் கூட்டணி என்ற நரசிம்மராவின் முடிவை எதிர்த்து, வளமான தமிழகம்..வலிமையான பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து த.மா.கா.வை தோற்றுவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் இவர் பின்னால் அணிவகுத்து எம்.பி., எம்.எல்.ஏ.களாகினர். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் அவர் காலமானார். எந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தாரோ அதே ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இவர் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு த.மா.கா. காங்கிரஸில் இணைக்கப்பட்டதெல்லாம் தனிக்கதை.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications