அதிகபட்சமாக 20 செ.மீ மழை கொட்டும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
Recommended Video
சென்னை: கஜா புயல் காரணமாக, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள், பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகப்பட்டினத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக இம்மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும். இதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் இந்த அளவுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமைச்சரையும் கடுப்பேற்றிவிட்டதே இந்த கஜா புயல்! குழப்பமோ, குழப்பம்
இது தவிர கேரளா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். இந்த மழை 16ஆம் தேதியான, நாளை வரை தொடரக்கூடும்.
புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.