7 மாவட்டங்களை முடக்கிய கஜா புயல்.. பேருந்துகள், ரயில்கள், கடைகள் இயங்கவில்லை
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே ரயில்கள் முடக்கம்
இந்த புயல் காரணமாக ஏற்கனவே ரயில்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை , விழுப்புரம் - மயிலாடுதுறை, காரைக்கால் - சென்னை, சென்னை - மன்னார்குடி ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த புயல் காரணமாக காரைக்கால், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

கடைகள் அலுவலகங்கள்
அதேபோல் கடைகள் அலுவலகங்கள் எதுவும் நாளை காலை வரை இயங்காது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் இன்று மாலையே மூடப்பட வேண்டும், பணியில் இருப்பவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நாளைக்கு சேர்த்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பேருந்துகள்
தற்போது கஜா காரணமாக 7 மாவட்டங்களில் தனியார், அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

மொத்தமாக முடக்கியது
புயல் வீசும் நேரத்தில் டூவீலரில் போவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு புயலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களை புயல் முடக்கி போட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications