சென்னையில் காலை 11 மணிக்கு காற்று வீசும் மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை!
கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை அல்லது இரவு இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து கஜா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
[கும் இருட்டு.. காற்றுடன் மழை.. ஜில், ஜில் சென்னை ]
நல்ல வேகம்
இந்த புயல் நிமிடத்திற்கு நிமிடம் வேகம் அதிகரித்து வருகிறது. காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது பின் 8 கிலோ மீட்டராக அதிகரித்தது. சில நிமிடம் முன்பு வரை கஜா புயல் 14 கிமீ வேகத்தில் நகர்ந்தது. தற்போது 23 கிமீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு மிக அருகில்
இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் அருகேதான் கரையை கடக்க உள்ளது. ஆனால் கடலூரை விட சென்னைக்கு அருகில்தான் இந்த புயல் உள்ளது. சென்னையில் இருந்து 328 கிமீ தூரத்தில் புயல் உள்ளது. ஆனால் கடலூரில் இருந்து 340 கிமீ தூரத்தில் இருக்கிறது.
மழை பெய்கிறது
இதன் காரணமாக சென்னையில் மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் மழை பெய்கிறது. கோயம்பேடு, பெரம்பூர், போரூர், திருவான்மியூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, கொளப்பாக்கம், கொளத்தூரில் மழை பெய்து வருகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணிக்கு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 மணிக்கு காற்று வீசும் போதே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.