கஜா: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. அழகப்பா தேர்வுகள் ஒத்திவைப்பு!
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
கஜா புயல் தமிழகத்தை நெருங்கிவிட்டது. இந்த புயல் காரணமாக இன்று பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.
கஜா புயல் காரணமாக தற்போது தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இன்று நடக்கவிருந்த அழகப்பா தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications