கஜா புயல்.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட் | ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ்- வீடியோ
சென்னை: கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Nov 13, 2018, 2:47 pm IST
திடீரென வேகமெடுக்கும் கஜா புயல்
மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தகவல்
Nov 13, 2018, 11:33 am IST
ஆந்திர மாநிலத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்வதையொட்டி ரெட் அலர்ட் வாபஸ்
கஜா புயலால் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது
Nov 13, 2018, 10:44 am IST
புயல் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்க கூடாது என முதல்வர் அறிவுரை
தலைமைச் செயலாளருடன் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தொடர்பில் உள்ளனர்
Nov 13, 2018, 10:15 am IST
பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு