தமிழகத்தை நெருங்கியது கஜா புயல்.. இன்று கரையை கடக்கும்.. தற்போது எங்குள்ளது?
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
புயலில் இருந்து மக்களை காப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
[கஜா புயலால் சென்னையில் காலை முதல் மழை]

தீவிரமாக மாறியது
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. தற்போது முழு வேகத்தை இந்த புயல் நகர்ந்து வருகிறது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது. அதனால் இன்று மாலை கண்டிப்பாக கரையை கடந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடக்கும்
இந்த புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலூர் இந்த புயல் காரணமாக அதிக பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த புயல் காரணமாக நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

எங்கு உள்ளது
இந்த புயல் தற்போதுபாம்பனில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்று மாலை தமிழகத்திற்குள் இந்த புயல் வந்துவிடும். தற்போது இந்த புயல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று மாலை கடக்கும்
இன்று மாலை இந்த புயல் கரையை கடக்கும். மாலை 5 மணிக்கு புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.












Click it and Unblock the Notifications