ஒரு சிலிண்டர் ரூ.4 ஆயிரமாம்.. டீ, காபி விலையை உயர்த்திய கடை உரிமையாளர்கள்.. பாதிக்கப்படும் மக்கள்!
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு டீ, தற்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட காபி, ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவதாக சாமானிய மக்கள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனை மீறி ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தில் எந்த சரக்கு கப்பல் வந்தாலும், தாக்குதல் நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமல்லாமல் எரிவாயு விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 60% எரிவாயு சவுதி அரேபியாவை நம்பியே இருக்கிறது. தற்போது விநியோகம் தடைப்பட்டுள்ளதால், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
அப்படியே சில ஹோட்டல்கள் செயல்பட்டாலும் அதில் உற்பத்தி செய்யும் உணவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விடுதிகளில் சாப்பாடு கட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பணியாற்றும் இளைஞர்கள் பலரும் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலையை டீ கடை உரிமையாளர்கள் உயர்த்தி இருக்கின்றனர்.
இதுகுறித்து டீ கடை உரிமையாளர்களிடம் கேட்ட போது, கேஸ் சிலிண்டர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.. ஒரு சிலிண்டர் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரமாக ஏஜென்சிகள் விற்பனை செய்கிறார்கள் என்று புலம்பி வருகின்றனர். இதனால் சிலிண்டரை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications