15 நாட்களில் இனி வோட்டர் ஐடி.. விண்ணப்பிப்பது எப்படி? டிராக் செய்வது எப்படி தெரியுமா?
சென்னை: தற்போது புதிதாக ஒரு வாக்காளர் ஒருவர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால் அது கைக்கு வந்து சேர ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் நிலை உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமத்தை குறைக்கும் விதமாகவும் வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் தேர்தலே ஒரு ஜனநாயக திருவிழா போல நடக்கிறது. தேர்தலில் போலி வாக்காளர்கள், கள்ள ஒட்டுக்கள் உள்ளிட்ட பிரச்சினையை தீர்க்க பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கோண்டு வருகிறது.

15 நாட்களுக்குள் அடையாள அட்டை
அந்த வகையில் வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வரப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாலோ அல்லது திருத்தம் செய்தாலோ 15 நாளுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
* புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, தேசிய வாக்காளர் சேவை (NVSP) இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
* இணையதளத்தின் மேல் வலது பக்கத்தில் உள்ள "Sign-Up" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
* பெயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதனை உறுதிப்படுத்திய பின் OTPக்கு ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டும்.
* உங்கள் மொபைல் மற்றும் இமெயிலுக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். இந்த OTP-ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்.
* புதிய வாக்காளர் பதிவுக்கான "Form 6"-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், உறவினர் விவரங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை செக் செய்ய வேண்டும்.
* விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் துல்லியமாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறிவது?
* விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க, தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தைப் பார்வையிடவும்.
* இணையதள பக்கத்திற்கு சென்றவுடன் Track Application Status' என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு மொபைல் எண், கடவுச்சொல், கேப்ட்சா குறியீடு மற்றும் OTP ஆகிய விவரங்கள் கேட்கப்படும். இவற்றை பதிவு செய்ய வேண்டும்.
* Form 6 அல்லது Form 6A சமர்ப்பித்த பிறகு பெறப்பட்ட reference எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர் எந்த மாநிலம் என்பதை செலக்ட் செய்து "Submit" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு திரையில் விண்ணப்பத்தின் நிலை காட்டப்படும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications