எந்த சின்னம் வேண்டுமானாலும் கொடுங்க.. நாங்க வெற்றிபெறுவோம்.. கெத்து காட்டும் டிடிவி தினகரன்!
தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதாவது அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதப்பட மாட்டார்கள். மாறாக சுயேட்சையாக கருதப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!

தமிழர்கள்
இதையடுத்து துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அதில், உலக தமிழர்கள் எல்லோரும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கி உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.

சுயேச்சை
குக்கர் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு பொது சின்னம் கிடைக்க போகிறது. அதனால் எங்களுக்கு இதன் மூலம் நன்மைதான். நாங்கள் பொது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.

பொதுச் சின்னம்
எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும். ஆர்.கே நகரில் ஒரே வாரத்தில் குக்கர் சின்னத்தை பிரபலம் அடைய செய்தோம். அ.ம.மு.க.க்கு பொதுவான சின்னம் கிடைக்கும். அதையும் பிரபலம் அடைய செய்வோம்.

நல்லதே நடக்கும்
எங்களிடம் சின்னத்தை கேட்டால் சொல்வோம். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னதை பெற்றுக்கொள்வோம். நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன், எல்லா வேட்பாளர்களுக்காகவும் சென்று பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications