போராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டிரைக்கின் போது பிடிக்கப்பட்ட சம்பளத்தை, உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக அரசை வலியிறுத்தியுள்ளது.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி-யை அங்கன்வாடிகளில் இணைக்காமல், தொடக்கப்பள்ளிகளில் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் முத்துசாமி, முழுஅதிகாரம் பெற்ற தொடக்ககல்வி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Give back the hold salary during the strike.. Tamilnadu Teachers Alliance request

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முறையான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கென புதிய விதிமுறைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அரசுப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். எனவே அரசுதொடக்கப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கென தனி ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், பிடித்த சம்பளத்தை ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+