போராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
சென்னை: ஸ்டிரைக்கின் போது பிடிக்கப்பட்ட சம்பளத்தை, உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக அரசை வலியிறுத்தியுள்ளது.
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி-யை அங்கன்வாடிகளில் இணைக்காமல், தொடக்கப்பள்ளிகளில் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் முத்துசாமி, முழுஅதிகாரம் பெற்ற தொடக்ககல்வி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முறையான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கென புதிய விதிமுறைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரினார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அரசுப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். எனவே அரசுதொடக்கப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கென தனி ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், பிடித்த சம்பளத்தை ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications