#NEET மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் - கமல்ஹாசன்
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என்று கூறியுள்ள கமல், நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் அச்சம் காரணமாக கடந்த வாரம் விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகத்தின் சுவடு இன்னும் மறையாத நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி அதே காரணத்துக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?" என்றார்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?
என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என்று கூறியுள்ள கமல், நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை! என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிஸ்ரீ துர்காவின் மரண சுவடு காயும் முன்பாக நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications