வாகன உரிமையாளர்களுக்கு நல்ல செய்தி.. மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை : கொரோனா பொது முடக்கம் காரணமாக தவித்து வரும் வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா காரணமாக, வாகனங்கள் இயங்காத காரணத்தால் வரியை கட்ட முடியாமல் வாகன உரிமையாளர்கள் தவிக்கிறார்கள்.இந்நிலையில் வரி செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை செலுத்த ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

ஆனால் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மோட்டார் வாகன வரி செலுத்த காலஅவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆனால் தற்போது தொடர் ஊரடங்கு காரணமாக ஆண்டு வரிக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்டதால். செப்டம்பர் 30வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications