தப்பு..தப்பு! எடப்பாடி மீதே கேஸ் போடுவீங்களா? ஈரோடு கிழக்கு ரிசல்ட் பாத்து -வெகுண்டெழுந்த ஜிகே வாசன்
"நேற்றைய தினம் விமான நிலைய பேருந்தில் நடந்த அநாகரிக சம்பவத்திற்கு காரணமான பிரமுகரை விசாரனை செய்யவில்லை. கைது செய்யவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை."
சென்னை: மதுரையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
முன்னாள் தமிழக முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

ஈரோடு கிழக்கு தேர்தல்
அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர் அவர்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீதும் வழக்கு போடுவது அநாகரிகமானது, நியாயமற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கு பிறகு தி.மு.கவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் தாண்டி அ.தி.மு.க வினுடைய, வளர்ச்சியும், வாக்கு வங்கியும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வன்மையாக கண்டிக்கிறோம்
அவற்றை குலைப்பதற்கான, முறியடிக்க கூடிய முயற்சியாகவே இது தெரிகிறது. இதுபோன்ற செயல்களை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நேற்று சிவகங்கையில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருக்கு எதிராக முழக்கமிட்டார் ராஜேஸ்வரன்.

துரோகத்தின் அடையாளம்
எடப்பாடி பழனிசாமியை "துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்." எனக் கூறியபடி பேசிய ராஜேஸ்வரன் அத்துடன் முகநூலில் லைவ் செய்து உள்ளார். அப்போது அவரது செல்போனை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் வேகமாக பறித்தார்.

வழக்கு ஏன்?
ராஜேஸ்வரனை அதிமுகவினர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீதும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications