Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு..தப்பு! எடப்பாடி மீதே கேஸ் போடுவீங்களா? ஈரோடு கிழக்கு ரிசல்ட் பாத்து -வெகுண்டெழுந்த ஜிகே வாசன்

"நேற்றைய தினம் விமான நிலைய பேருந்தில் நடந்த அநாகரிக சம்பவத்திற்கு காரணமான பிரமுகரை விசாரனை செய்யவில்லை. கைது செய்யவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை."

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

முன்னாள் தமிழக முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

ஈரோடு கிழக்கு தேர்தல்

ஈரோடு கிழக்கு தேர்தல்

அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர் அவர்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீதும் வழக்கு போடுவது அநாகரிகமானது, நியாயமற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கு பிறகு தி.மு.கவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் தாண்டி அ.தி.மு.க வினுடைய, வளர்ச்சியும், வாக்கு வங்கியும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வன்மையாக கண்டிக்கிறோம்

வன்மையாக கண்டிக்கிறோம்

அவற்றை குலைப்பதற்கான, முறியடிக்க கூடிய முயற்சியாகவே இது தெரிகிறது. இதுபோன்ற செயல்களை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நேற்று சிவகங்கையில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருக்கு எதிராக முழக்கமிட்டார் ராஜேஸ்வரன்.

 துரோகத்தின் அடையாளம்

துரோகத்தின் அடையாளம்

எடப்பாடி பழனிசாமியை "துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்." எனக் கூறியபடி பேசிய ராஜேஸ்வரன் அத்துடன் முகநூலில் லைவ் செய்து உள்ளார். அப்போது அவரது செல்போனை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் வேகமாக பறித்தார்.

வழக்கு ஏன்?

வழக்கு ஏன்?

ராஜேஸ்வரனை அதிமுகவினர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீதும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+