அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா..? ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்து கட்டி வந்த ஜிகே வாசன்!
சென்னை: அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா என ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்துக் கட்டியிருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
இளைஞர்களுக்கு அரசியல் தலைவர்கள் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டாம் என வாசன் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மா.பொ.சி. சிலை
எல்லை காத்த வீரர் என்றழைக்கப்படும் மா.பொ.சிவஞனத்தின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜி.கே.வாசன், அக்னிபாத் திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக வேதனைத் தெரிவித்தார். அக்னி பாத் திட்டத்துக்கு ஆதரவாக பேசுவதில் பாஜகவினரையே பின்னும் தள்ளும் வகையில் வாசன் பேசினார்.

ராணுவத்தின் மதிப்பு
ராணுவத்தின் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜி.கே.வாசன், இளைஞர்களின் நல்வாழ்வுக்கு யாரும் இடையூறாக நிற்க வேண்டாம் எனக் கோரினார். இளைஞர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மத்தியில் தவறான தகவல்களை கொண்டு சேர்ப்பது மோசமான செயல் என்று கூறிய வாசன், அக்னி பாத்தை கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என வாசன் தெரிவித்தார்.

போதைப் பொருள்
போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனக் கூறிய வாசன், பள்ளி , கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முன்னதாக பேசிய வாசன், சென்னையை ஆந்திராவுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைநகரை காத்த மா.பொ.சி.க்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
Recommended Video

வாசன் செயல்பாடு
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் போது தான் ஜி.கே.வாசனை காண முடிகிறது. மற்ற நேரங்களில் எல்லாம் அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாத அளவுக்கு இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காத்து வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications