புதிய கல்வி கொள்கையில் 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி- வரவேற்புக்குரிய 6 அம்சங்கள்: ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் 3 முதல் 5 வயது வரையிலான மழலையர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஆழ்ந்த ஆய்வு, பரந்த கலந்துரையாடல், கல்வியாளர்களின் கருத்து அறிதலுக்குப்பின், புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

GK Vasan Welcomes New Education Policy

அறிவிக்கப்பட்ட கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக,

  • 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி வழங்குதல்.
  • ப்ளஸ் 2 வகுப்பு வரை இலவச கட்டாயக்கல்வி.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கும் இலட்சியம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 6 சதவிகிதம் நிதி கல்விக்கு ஒதுக்கீடு.
  • அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல் செய்தல்.
  • உயர் கல்வியை முறைப்படுத்த ஒரே ஒழுங்காற்று ஆணையம், மும்மொழிக் கொள்கைஅறிமுகம், இதனை செயல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருக்கும் சிறப்பு அம்சம்.
  • பிரதமரைத் தலைவராக கொண்ட தேசிய கல்விக்குழு அமைத்தல்.
  • 34 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு, இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கல்வி கொள்கை இது.

- புதிய நவீன இந்தியாவை அறிவாற்றல் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ள கல்வி கொள்கை இது.

நல்ல அம்சங்களை கொண்ட இக்கல்வி கொள்கையால் வருங்கால இளைஞர் பயன்பெறுவார்கள் என்று த.மா.கா சார்பாக குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+