இட்லி மாவு பாக்கெட்டுக்கு ரேஷன் அரிசி.. விருதுநகருக்கு வியப்பை தந்த 500 கிலோ மூட்டை.. இனிமே நிம்மதி
சென்னை: ரேஷன் அரிசியை கடத்தினால், அவர்களது குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்" என்று ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும, தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. இதுசம்பந்தமாக காவல்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில், ரேஷன் அடடைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறையவில்லை..

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி
ரேஷன் அரிசியை, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக எல்லைகளில் இந்த ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்கென்றே, புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இதுபோன்ற புரோக்கர்களால்தான், ரேஷன்தாரர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது.
பெரும்பாலானோர், ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி, இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்கிறார்கள்.. குறிப்பாக, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசியை வாகனத்தில் வைத்து கொண்டுபோகிறார்கள்.. எனவேதான், ரேஷன் அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், போலீசார் தீவிர வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
இட்லி மாவு கடைகளுக்கு விநியோகம்
இந்நிலையில், தூத்துக்குடி கோவில்பட்டியிலிருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு நேற்றைய தினம் ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, அவரது தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கிளவிப்பட்டி பகுதிக்கு சென்று, முன்கூட்டியே வாகன சோதனையில் ஈடுபட்டனர்..
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து, அதிலிருந்த ஓட்டுனர் மணிகண்டனை பிடித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், அந்த காரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியானது.. இதையடுத்து, காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இரண்டையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மணிகண்டனையும் கைது செய்தனர்.
மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி
அதேபோல, சென்னை ஓட்டேரி பகுதியில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதாகவும், அதை வாங்கி, அங்குள்ள வீடுகளுக்கு இட்லி மாவு அரைப்பதற்கு பயன்படுத்துவதாகவும் ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியில் ஓட்டேரி போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது, இட்லி மாவு அரைக்கும் ஒரு கடையில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 322 கிலோ ரேஷன் அரிசி, 3 கிரைண்டர்கள் மற்றும் 500 கிலோ இட்லி மாவு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீண்டும் சுற்றிவளைத்து கைது
இதுதொடர்பாக ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியைச் சேர்ந்த உஷா (45) என்பவரையும் கைது செய்தனர். அவரை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 நாட்களுக்கு முன்புகூட, விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் ஆய்வு செய்தபோது, திருமங்கலம் அருகே உள்ள அரசம்பட்டியை சேர்ந்த கனகபாண்டி(29), என்பவர் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு தந்த நிம்மதி தகவல்
கடந்த வாரம் காவல்துறை தரப்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.. அதில், கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும், ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11571 நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் 2012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 89 பேருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications