கோகுல்ராஜ் கொலை வழக்கு.. மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.. தாய் சித்ராவின் கோரிக்கை ஏற்பு
சென்னை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி இருவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்றபோது கோகுல்ராஜ் மாயமானார். இதுகுறித்து திருச்செங்கோடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில்அடுத்த நாள் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே, கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாக கோகுல்ராஜின் தாய் சித்ரா பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தால் அது நியாயமாக நடக்காது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சித்ரா கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது அப்போது கோகுல்ராஜ் தாயின் கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது
சித்ராவின் கோரிக்கையை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது .மேலும் வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications