கோகுல்ராஜ் கொலை வழக்கு.. மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.. தாய் சித்ராவின் கோரிக்கை ஏற்பு
சென்னை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி இருவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்றபோது கோகுல்ராஜ் மாயமானார். இதுகுறித்து திருச்செங்கோடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில்அடுத்த நாள் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே, கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாக கோகுல்ராஜின் தாய் சித்ரா பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தால் அது நியாயமாக நடக்காது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சித்ரா கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது அப்போது கோகுல்ராஜ் தாயின் கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது
சித்ராவின் கோரிக்கையை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது .மேலும் வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications