Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தின் மதிப்பு மட்டுமல்ல.. முதன்முறையாக வங்கிகளின் தங்க நகைக்கடனும் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து 1 சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளில்
தங்க நகைக்கடன் வினியோகம் குறித்த தககூல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நம்முடைய நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு அனைத்து காலத்திலும் இருந்து வருகிறது.. எனினும், உலக பொருளாதாரத்தின் நிலைமை, தங்கத்தின் தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டு வருகின்றன.

Gold Jewellery Loan Banks Gold Loan

தங்கம் நகை மதிப்பு

எனினும், தேவைப்படும் நேரங்களில், அந்த தங்கத்தை பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதால், தங்கத்தின் மதிப்பு எப்போதுமே குறையாமல் உள்ளது. பொதுமக்களுக்கு அவசரத்துக்கு பணத்தேவை இருக்கிறதென்றால் வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறையும் உள்ளது.

பொதுவாக தங்க நகைக்கடனை வங்கியில் பெறுவதற்கு பெரிய அளவிலான நிபந்ததனைகள், விதிமுறைகள் கிடையாது.. மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்தக் கடனுக்குத் தான் குறைவாக இருக்கும்.

நகைக்கடன் வங்கி

எனவேதான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், விரைந்தும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில்கூட, கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அடமானம் தங்க நகைகள்

தங்கம் விலை தினம் தினம் ஒருபுறம் உயர்ந்து கொண்டே போக, மறுபுறம் வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்நிலையில், இந்தியாவின் வங்கிகள் வழங்கிய தங்க நகைக்கடன்களின் மதிப்பு, நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரூ.1 லட்சம் கோடி தாண்டியது

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், வங்கிகளின் தனிநபர் கடன் பிரிவில், முதல்முறையாக தங்க நகைக்கடன் வினியோகம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது.. இந்த முதல் அரையாண்டில், வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் 51 சதவீதம் அதிகரித்து, 1,07,307 கோடி ரூபாயாகின.

கடந்த வருடம் இதே காலத்தில் வழங்கப்பட்ட 44,519 கோடி ரூபாய் நகைக்கடனோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 43 சதவீதம் அதிகமாகும்.

வங்கிகளில் ஒரு அரையாண்டில் 1 லட்சம் கோடி நகைக்கடன் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.. தங்கத்தின் விலை மதிப்பு உயர்வது, பாதுகாப்பான கடன்களுக்கு வங்கிகள் முக்கியத்துவம் தருவது போன்றவையே தங்க நகைக்கடன் மதிப்பு உயர காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+