Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது.. விசாரணையில் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு போன வழக்கில் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்... மிகுந்த ஆற்றல் மிக்க படைப்பாளி. இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றுள்ள இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

gold jewels theft at Writer Jayakanthan daughters house

இவரை இலக்கிய ராட்சசன், எழுத்துலக அரசன் என அழைக்கிறார்கள். இவர் யாரிடம் எழுத்துத்திறமை இருந்தாலும் அவர்களை பாராட்டமல் இருக்க மாட்டார். இவருடைய எழுத்தில் புரட்சி, புதுமை, யதார்த்தம் என இருக்கும்.

உன்னை போல் ஒருவன், யாருக்காக அழுதான்,புதுசெருப்பு கடிக்கும் உள்ளிட்ட பல படைப்புகளை படைத்துள்ளார். இவருடைய மகள் தீபலட்சுமி. இவருடைய கணவர் அலோசியஸ் ஜோசப். இவர் பிரபல நிதி நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டில்தான் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜோசப் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் 4 ஆண்டுகளாக வீட்டில் பணிபுரியும் சுமித்ரா என்ற பெண்தான் நகைகளை திருடினார் என்பது தெரியவந்தது.

அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அப்போது நகைகளை திருடியதாக ஒப்புக் கொண்டார். 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாததால் கொஞ்சம் கொஞ்சமாக திருடியதாகவும் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு அவற்றை விற்று பணம் கட்டியதாகவும் சுமித்ரா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+