தங்கத்தை நம்பி கடன் கொடுத்தா.. தெருவுல தான் போகனும்! லோன் கட்டாமல் பதுங்கும் மக்கள்! எச்சரிக்கை மணி!
சென்னை: இந்தியாவில் தங்க நகை அடமான கடன் (கோல்டு லோன்) பெறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தாதோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக olan TransUnion CIBIL வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது. குறிப்பாக அதிக தொகை கடன் பெற்றவர்களிடையே தவணை செலுத்தாத நிலை அதிகரித்திருப்பது நிதி துறைக்கு "எச்சரிக்கை மணி" என பார்க்கப்படுகிறது.
வங்கி மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கு கடன் தகவல் தரும் நிறுவனமான ஒலன் ட்ரான்ஸ்யூனியன் சிபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ₹2.5 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களிடையே தவணை செலுத்தாதோரின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, ₹2.5 லட்சத்திற்கு மேல் நிலுவையில் கடன் வைத்திருப்பவர்களில் 1.5 சதவீதம் பேர் தவணைகளை சரியாக செலுத்தாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த தொகை கடன் பெற்றவர்களை ஒப்பிடும்போது சுமார் 2 மடங்குக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஒரே நபர் ஐந்துக்கும் மேற்பட்ட கடன்களை எடுத்திருந்தால், அவர்களிடையே தவணை செலுத்தாதோர் விகிதம் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பல இடங்களில் கடன் எடுத்து, அதிக கடன் சுமையை ஏற்றுக் கொள்வது ஒரு புதிய சிக்கலாக உருவாகி வருவதை காட்டுகிறது. இந்த அறிக்கையின் படி, ஒருவருக்கு சராசரியாக உள்ள தங்க நகை கடன் தொகை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
2022 டிசம்பரில் ஒருவருக்கு சராசரி ₹1.9 லட்சம் கடன் இருந்த நிலையில், தற்போது அது ₹3.1 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களின் வருமானத்தை விட அதிக கடன் எடுக்கும் நிலை உருவாகி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் தங்க நகை கடன் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
2022 மார்ச் மாதத்தில் மொத்த சில்லறை கடன்களில் 5.9 சதவீதமாக இருந்த தங்க நகை கடன், 2025 டிசம்பர் மாதத்துக்கு 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்க நகை கடன் துறை தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய சில்லறை கடன் துறையாக மாறியுள்ளது. இந்நிலையில், தங்க நகை கடன் வழங்கும் நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கடன் வழங்கும் போது உரிய ஆய்வு செய்யாமல் கடன் வழங்குதல், நகைகளை ஏலத்தில் விடும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார சிக்கல்களில் சிக்கும்போது அதிகமாக தங்க நகை கடன்களை நம்பி இருப்பதும் ஒரு கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்தால், கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் தங்கத்தின் மதிப்பு குறைந்தால், கடன் தொகையை மீட்க நகைகளை ஏலத்தில் விட வேண்டிய நிலை அதிகரிக்கலாம். தற்போது பல நிதி நிறுவனங்கள், குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) தங்களிடம் அடமானமாக உள்ள தங்க நகைகளை ஏலத்தில் விடுவதன் மூலம் கடன் தொகையை மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றன.
ஆனால் இந்த ஏல நடைமுறைகளும் தற்போது கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்காணிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்க நகை கடன் பெறுவது அதிகரித்து வரும் நிலையில், அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகுவது நிதி துறைக்கும், பொதுமக்களுக்கும் எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலாமா..? வேண்டாமா..? நிபுணர்கள் சொல்லும் முக்கிய பாயின்ட்! -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
Gold Rate: தமிழ் புத்தாண்டு தினத்தில் ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு? -
Gold Rate: மளமளவென சரியும் தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்














Click it and Unblock the Notifications