தங்க நகைக்கடன் விதிகளில் தளர்வா? ரிசர்வ் வங்கி ஆளுநர் கொடுத்த விளக்கம்!
டெல்லி: தங்க நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான் என்றும், மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும், தங்க நகைக்கடன் வாங்குவோர், நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை அளிக்க வேண்டும், தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

தங்க நகைக்கடன் விதிகள்
அதேபோல் நகைகள் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். தனி நபர்கள் இனி ஒரு கிலோ வரை மட்டுமே நகை அடகு வைக்க முடியும் உள்ளிட்ட 9 புதிய விதிகளை ஆர்பிஐ கொண்டு வந்தது. இந்த விதிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு என்று சொல்லப்பட்டது. இதற்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசு பரிந்துரை
அதேபோல் தமிழக அரசு தரப்பில் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன்பின் மத்திய நிதியமைச்சகம் தரப்பில், தங்க நகைக்கடன் விதிகளில் சில தளர்வுகளை அளிக்க பரிந்துரை செய்தது. குறிப்பாக ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ரெப்போ ரேட்டை குறைத்த ரிசர்வ் வங்கி
இதனால் சிறு கடன் வாங்குவோர், அவசர கடன் வாங்குவோருக்கு விரைவில் கடன் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6ல் இருந்து 5.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
நகைக்கடன் விவகாரம்
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்க நகைக்கடன் விவகாரம் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதில், நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான். மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications