காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கம் மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலைகளை செய்ய பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் வழங்கிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சம் ஆகும்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்கம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

11 பேர் மீது வழக்குப்பதிவு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் பயன்பாட்டில் உள்ள சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் உற்சவர் சிலைகள் 1,500 ஆண்டுகள் தொன்மையானது. இந்த சிலைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு சேதமானதால், புதிதாக சிலைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
புதிய சிலை செய்ய தங்கம் 5 %, வெள்ளி 1 %, செம்பு 80% என 55 கிலோ எடையில் புதிதாக 2 உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. புதிதாக செய்யப்பட்ட இந்த சிலைகளில் தங்கம் கலக்காமல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
அதாவது, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை சிவகாஞ்சி போலீசாரிடம் 2017 ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோயில் அர்ச்சகர்கள் என 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிலையில் தங்கம் பயன்படுத்தவில்லை
இந்த வழக்கின் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. புதிய உற்சவர் சிலைகளை ஐஐடி நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சிலையில் தங்கம் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிவகாஞ்சி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதன்படி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், போலீசார் ஆவணங்கள் தாக்கல் செய்தனர். இந்த ஆவணத்தின் நகல் காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.
312 சவரன் தங்கம்
இதில் காவல்துறை தாக்கல் செய்த திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஐஐடி குறித்த விவரம் உள்ளிட்டவை நீதிமன்றம் வாயிலாக மனுதாரருக்கு கிடைத்தது. இந்த ஆவணங்களின் மூலம், சோமாஸ்கந்தர் ஏலவார் குழலி அம்மன் சிலைகள் செய்ய பக்தர்களிடம் 312½ சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விவரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சம் ஆகும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்கம் மோசடி செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications