கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா? சகோதரர் சுப்பிரமணி விளக்கம்!
கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து.

இவருக்கு 30 வயதாகிறது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்ததை அடுத்து இவர் தங்கம் வென்றார். இவர் பதக்கம் வென்றதை அடுத்து இந்தியா முழுக்க வைரலானார்.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற குக்கிராத்தை சேர்த்தவர். மிகவும் வறுமையான சூழலை சேர்ந்த இவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, தகவல்கள் வெளியானது.
இவர் முறைகேடாக ஊக்கமருத்து பயன்படுத்தினார். அதனால் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்திகள் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதி மாரிமுத்தை சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. கோமதி மாரிமுத்து ஊக்குமருந்து பயன்படுத்தியதே இல்லை. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எந்த வித தகவல்களும் வரவில்லை, என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications