சென்னையில் கொரோனாவிலிருந்து 68% பேர் மீண்டாச்சு.. ஏரியாக்களில் அதிகரிக்கும் மந்தை எதிர்ப்பு சக்தி
சென்னை: சென்னையில், கொரோனா பாதித்தவர்களில் 68 சதவீதத்திற்கும் மேல் குணமடைந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியில், ஏப்ரல் முதல் வாரம் முதல்தான், பரவலாக கொரோனா தொற்று கண்டறியப்படுகின்றது. தற்போது சென்னையில் சுமார் முக்கால் லட்சம் பேர், அதாவது சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 73728 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி, 78,161 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சுமார் 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ் விகிதம்
இது சுமார் 68 சதவீதமாகும். இன்னும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அதேநேரம், டிஸ்சார்ஜ் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து, சென்னை மாநகராட்சி வேகமாக மீண்டு வருகிறது.

சென்னை குணமடையும் விகிதம்
அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேகமாக குணமடைந்துள்ளனர். திருவொற்றியூரில், 2,845 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதில், 1,801 பேர் குணமடைந்துள்ளனர். 63 சதவீத டிஸ்சார்ஜ் விகிதம் இதுவாகும். இந்த மண்டலத்தில் உயிரிழப்பு, 65 என்ற அளவுக்கு இருந்தது.

ராயபுரத்தில் அசத்தல்
மணலியில், குணமடைந்தோர் விகிதம் 66 என்பதாக உள்ளது. உயிரிழப்பு, 15 ஆக உள்ளது. ராயபுரத்தில் தொற்று முன்பு அதிகம் பதிவானது. மொத்தம் 9,242 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 7,340 பேர் குணமடைந்தனர். குணமடையும் விகிதம் 79 சதவீதம் எந்ற அளவுக்கு உள்ளது. எனவே சென்னை மாநகராட்சியிலேயே மீட்பு விகிதம் அதிகம் உள்ள இடமாகவும் ராயபுரம் மாறி சாதித்துக் காட்டியுள்ளது. ராயபுரம் மண்டல்ததில், கொரோனா உயிரிழப்பு, 161 என்ற அளவில் இருந்தது.

தண்டையார்பேட்டை, அண்ணாநகர்
வட சென்னையின், ராயபுரத்துக்கு அருகாமையிலுள்ள, தண்டையார்பேட்டையில், தொற்று பாதித்தது 7,903 பேருக்கு. அதில், மீட்பு விகிதம் 77 என்ற அளவுக்கு உள்ளது. இந்த மண்டலத்தில் 166 பேர் இறந்துள்ளனர். தேனாம்பேட்டையில், 72 சதவீதமாக மீட்பு உள்ளது. வளசரவாக்கம், சோழிங்கநல்லுாரில் தலா 69 சதவீத மீட்பு உள்ளது. அண்ணாநகர், திரு.வி.க.நகர், அடையாறில் 68 சதவீதமாக உள்ளது மீட்பு விகிதம்.
ஆலந்துாரில், 58 சதவீதமும், பெருங்குடியில், 57 சதவீதம் பேரும் நோய் பாதித்து குணமடைந்துள்ளனர். இந்த மண்டலங்களில் அதிக சிகிச்சை வசதி தேவைப்படுகிறது.

தெருக்களில் மந்தை எதிர்ப்பு சக்தி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மந்தை எதிர்ப்பு சக்தி சென்னைவாசிகளுக்கு அதிகரிக்க தொடங்கும் என்பதுதான். 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய் பாதித்து குணமடைந்தால், மந்தை எதிர்ப்பு சக்தி ஏற்படும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து. ஆனால் 1 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சம் பேருக்காவது கொரோனா பாதித்தால்தான் இந்த கணிப்பு செல்லுபடியாகும். ஆனால், இப்போது அதிகம் பாதித்த மண்டலங்களில் குறிப்பிட்ட தெருக்களில் இனிமேல் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு குறைவு. ராயபுரத்தில் மீட்பு விகிதம் அதிகரிப்பதும், புதிய நோய் எண்ணிக்கை குறைவதும் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் பிற ஏரியா மக்கள், அந்த பகுதிக்கு செல்வதோ, அந்த மக்கள் பிற பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் செல்வதோதான் நோயை பரப்பும். மற்றபடி அந்தந்த தெருக்களில் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதே இந்த மீட்பு விகிதம் சொல்லும் பாடம்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications