சரோஜாதேவி வீட்டுக்கு.. டக்குன்னு வந்த நடிகர்.. கூடவே ஜானகி.. "ஆயிரம் சூரியன்" எம்ஜிஆரின் மாண்பு
சென்னை: இன்றைய இளைய தலைமுறையினர், மக்கள் திலகம் எம்ஜிஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்பு ஒன்று உள்ளது என்று சரோஜாதேவி பூரித்து சொல்கிறார்.. என்ன அது?
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அதிலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். எம்ஜிஆரின் சிறப்பியல்புகளையும், வள்ளல் குணத்தையும், தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதற்காகவே, எத்தனையோ மன்றங்கள், இயக்கங்கள் எம்ஜிஆர் பெயரில் இன்றும் செயல்பட்டு வருகின்றன..
சரோஜாதேவி: அந்தவகையில், எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புடையவரும், மூத்த பத்திரிகையாளரான, இதயக்கனி விஜயன், சிலதினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை சரோஜாதேவியை சந்தித்து பேசும்போது, எம்ஜிஆரின் நல்லியல்புகள் பற்றி சிலாகித்து சொல்லி உள்ளார். சரோஜாதேவி சொன்ன அத்தனை நிகழ்வுகளையும், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக, நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார் இதயக்கனி விஜயன்.
உயர்ந்த பண்பு: "என்னை பொறுத்தவரை அவர் மறையவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது பண்பையும், அன்பையும் ஒருசேர நான் நேரில் பார்த்துள்ளேன். 'நாடோடி மன்னன்' படத்தில்தான் நான் அறிமுகமானேன். இன்னும் சொல்லப்போனால் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து தான் வண்ணம் ஆரம்பமாகும். தான் அறிமுகப்படுத்தும் நாயகிக்கு நல்ல முறையில் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதில், அவர் மிகுந்த கவனமாக இருந்தார். பல சமயங்களில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட அவர் சொல்வார்.

ஆயிரம் சூரியன்: ஷூட்டிங்கில் ஒரு அபாயகரமான காட்சியில் யார் நடித்தாலும்சரி, முதலில் எம்ஜிஆரே நடித்து பிரச்சனை இல்லை என்று தெரிந்த பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களை நடிக்கச்சொல்வார்.. அவர் செட்டிற்கு வந்தாலே ஆயிரம் சூரியன் வந்ததுபோல் இருக்கும். அந்த தளமே அவ்ளோ பிரகாசமாக ஆகிவிடும். அவரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யார் நேரில் வந்தாலும், முதலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தானே பேச ஆரம்பிப்பார்.
இந்த பண்பு இன்றும் பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும், முதலில் நாம் அறிமுகம் செய்துகொண்டால் எதிரில் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகி விடுவார். இதை சின்னவர் (இன்றுவரை அவரை நான் இப்படித்தான் அழைப்பேன். பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்கரபாணி அண்ணன்தான்) பலமுறை செய்து நான் பார்த்துள்ளேன்.
ஜானகி அம்மா: என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள்தான் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்தநாளில் அவர் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.. என்னுடைய பிறந்தநாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் போன் வாழ்த்து எம்ஜிஆரிடம் இருந்துதான் வரும். என் வீட்டில் என்னுடைய அம்மா சத்யநாராயணா பூஜை செய்வார். ஒருமுறை என் பிறந்தநாளில், திடீர்னு ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்து விட்டார்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.. என் அம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண்டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன்றுதான் என்று என் அம்மா சொன்னதுமே, எதுவுமே சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டுப்போனார்கள்..
பிரியாணி: என் அம்மா சொன்னால் நான் என்றுமே தட்ட மாட்டேன்... ஒருமுறை நான் ஆணையிட்டால் படம் என்று நினைக்கிறேன்.. நான் ஷூட்டிங்கில் பிரேக் விட்டதும் டயர்டாக வந்து உட்கார்ந்தேன்.. எனக்கு அசைவ பிரியாணியை தந்தார் எம்.ஜி.ஆர்... இன்னைக்கு சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட சாப்பிடக்கூடாதுன்னு என் அம்மா சொல்லியிருக்காங்க" என்றேன்..
ஷூட்டிங் 12 மணியை தாண்டிவிட்டது.. உடனே எம்ஜிஆர், "இப்போ சாப்பிடலாமே" என்றார். எங்களைப் பொறுத்தவரை சூரியஉதயமானால்தான் அடுத்தநாள்.. காலையில் 6 மணிக்குதான் அடுத்த நாளே பிறக்கும்.. இதுவும் என் அம்மாதான் சொல்லியுள்ளார்கள் என்றேன்.
இதைக்கேட்டதும், செட்டில் இருந்தவர்களிடம், "இந்த சின்ன வயசிலேயே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேட்கிறா பாரு! என்று பெருமையாக சொன்னார்.. அது இன்னமும் என் காதுகளில் கேட்டுக்கிட்டே இருக்கு.
உயர்ந்த பண்பு: அவர் எப்பொழுதுமே நமது கலாச்சாரம், பண்பாடு இவைகளை பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்ததில்லை. அதேபோல் மற்றவர்களை தப்பாக பேசியதும் இல்லை. இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று' என்று பூரித்து சொன்னாராம் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications