சென்னையில் காலி சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. கடற்கரை ரயில்கள் தாமதம்! என்ன நடந்தது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காலி சரக்கு ரயில் தடம் புரண்டது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் லோடு இறக்கிவிட்டு தண்டையார்பேட்டை யார்டு நோக்கிச் சென்றபோது 2 வேகன்கள் தடம் புரண்டன. கடற்கரை ரயில் நிலையம் அருகே வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காலி சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், தண்டவாளத்தில் வேகன்கள் தடம் புரண்டதன் காரணமாக, ராயபுரம் - சென்னை கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications