இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மனும், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான கோபாலகிருஷ்ணன் (86 வயது) உடல் நலக்குறைவால் காலமானார் .
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த அவர் நேற்று மாலை 10.45 மணி அளவில் காலமானார் . அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெறம் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்,
கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிள்ளையின் மகன் ஆவார்.
மோசமாக பாதித்த கொரோனா நோயாளிகளின் உடலில்... வைரஸ் 90 நாட்களுக்கு இருக்குமாம்!!
இதனிடையே கோபாலகிருஷ்ணனின் மறைவுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியன் வங்கி முன்னாள் சேர்மனும், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான M.கோபாலகிருஷ்ணன் அவர்கள், உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி பெரும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன்" என்று கூறியுள்ளார்.