Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. ரேஷன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.. அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு நாளையும் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கம் ரூ.3 ஆயிரம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பு கடந்த 8- ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது.

gov-has-announced-that-the-pongal-gifts-will-be-distributed-to-those-who-missed-out-tomorrow-as-wel

இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு நியாய விலைக் கடைகளில் நாளையும் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 3,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சரியாக பதிவாகாத பயனாளிகளுக்கு கண் கருவிழி பதிவு முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 3000 அனைத்துப் பயனாளிகளுக்கும் ரேஷன் கடைகளில் நாளையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+