ஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை?... நீதிபதிகள் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தங்களது சாதியை வெளிப்படுத்தி கொள்ள பள்ளி குழந்தைகள் கைகளில் கூட அடையாள கயிறுகள் கட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.
அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் செலுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.
சாதியை அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், ஆணவக் கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 22ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரம் காலஅவகாசம் கேட்டனர். ஆனால், நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய விவகாரங்களில் அரசு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications